சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Marati
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
Songs from 13.0 to 473.0 ( திருவில்லிபுத்தூர் )
Pages:
Previous
1
2
3
4
5
6
7
8
9
10
Next
Next 10
கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நல்
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா
அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா
[173.0]
கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன் ஓடிச்
சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
[174.0]
ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்
துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கையெறிந்தானுக்குக்
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா
கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா
[175.0]
Back to Top
சீர் ஒன்று தூதாய்த் திரியோதனன் பக்கல்
ஊர் ஒன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கைசெய்து பார்த்தற்குத்
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
[176.0]
ஆலத்து இலையான் அரவின் அணை மேலான்
நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்
பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள்செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா
[177.0]
பொற்றிகழ் சித்திரகூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா
மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா
[178.0]
மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழத்
தன் நிகர் ஒன்று இல்லாச் சிலை கால் வளைத்து இட்ட
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா
வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா
[179.0]
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து
மின் இலங்கும் பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கும் நாமத்து அளவும் அரசு என்ற
மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா
வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா
[180.0]
Back to Top
அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வா என்று
மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர்ப் பட்டன்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே
[181.0]
ஆனிரை மேய்க்க நீ போதி
அருமருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன்
கரிய திருமேனி வாட
பானையிற் பாலைப் பருகிப்
பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே
செண்பகப் பூச் சூட்ட வாராய்
[182.0]
கரு உடை மேகங்கள் கண்டால்
உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு ஏழும்
உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா
திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற
மல்லிகைப் பூச் சூட்ட வாராய்
[183.0]
மச்சொடு மாளிகை ஏறி
மாதர்கள்தம் இடம் புக்கு
கச்சொடு பட்டைக் கிழித்து
காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்
நீள் திருவேங்கடத்து எந்தாய்
பச்சைத் தமனகத்தோடு
பாதிரிப் பூச் சூட்ட வாராய்
[184.0]
தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி
மார்களைத் தீமை செய்யாதே
மருவும் தமனகமும் சீர்
மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கருங்குழல் நெற்றி
பொலிந்த முகிற்-கன்று போலே
உருவம் அழகிய நம்பீ
உகந்து இவை சூட்ட நீ வாராய்
[185.0]
Back to Top
புள்ளினை வாய் பிளந்திட்டாய்
பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு
காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க
அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த
செங்கழுநீர் சூட்ட வாராய்
[186.0]
எருதுகளோடு பொருதி
ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து
கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்கண் தீமைகள் செய்து
சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே
புன்னைப் பூச் சூட்ட நீ வாராய்
[187.0]
குடங்கள் எடுத்து ஏற விட்டுக்
கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதிமுகத்தாரை
மால்செய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை
இரு பிளவு ஆக முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்த எம் கோவே
குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்
[188.0]
சீமாலிகன் அவனோடு
தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணிச்
சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே
அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்
இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்
[189.0]
அண்டத்து அமரர்கள் சூழ
அத்தாணியுள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்
தூமலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும்
ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்கக்
கருமுகைப் பூச் சூட்ட வாராய்
[190.0]
Back to Top
செண்பக மல்லிகையோடு
செங்கழுநீர் இருவாட்சி
எண் பகர் பூவும் கொணர்ந்தேன்
இன்று இவை சூட்ட வா என்று
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி
மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்
பட்டர்பிரான் சொன்ன பத்தே
[191.0]
இந்திரனோடு பிரமன்
ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு
மறைந்து உவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும்
சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போது இது ஆகும்
அழகனே காப்பிட வாராய்
[192.0]
Other Prabandhams:
திருப்பல்லாண்டு
திருப்பாவை
பெரியாழ்வார் திருமொழி
நாச்சியார் திருமொழி
திருவாய் மொழி
பெருமாள் திருமொழி
திருச்சந்த விருத்தம்
திருமாலை
திருப்பள்ளி எழுச்சி
அமலன் ஆதிபிரான்
கண்ணி நுண் சிறுத்தாம்பு
பெரிய திருமொழி
திருக்குறுந் தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
முதல் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி
திருவிருத்தம்
திருவாசிரியம்
பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார்
திரு எழு கூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்
இராமானுச நூற்றந்தாதி
திருவாய்மொழி
கண்ணிநுண்சிறுத்தாம்பு
அமலனாதிபிரான்
திருச்சந்தவிருத்தம்
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
send corrections and suggestions to admin-at-sivaya.org
divya prabandham song